Wednesday, April 29, 2015

சிந்திப்பீர் ....!!

ராசிக்கல் போட்டுக் கொண்டால் 
ராஜ யோகம் கூடிடுமோ ? 
கங்கை நதியில் நீராட 
கர்ம வினை நீங்கிடுமோ ? 

வாஸ்துப்படி வாசல் மாற்ற 
வந்த துன்பம் போய்விடுமோ ? 
எண்கணிதப்படி பெயர் மாற்ற 
எட்டா உயரம் கிட்டிடுமோ ? 

கட்டம்காட்டும் வழி செல்ல 
பட்ட பாடு பறந்திடுமோ ? 
சாமியாரைச் சரண் அடைந்தால் 
சகல யோகம் சித்திக்குமோ ? 

சிந்தித்து செயல்பட்டால் 
சிந்தனையில் தெளிவிருந்தால் 
தன்னம்பிக்கை நிறைந்திருந்தால் 
தளராத திடமிருந்தால் 

போராடும் துணிவிருந்தால் 
நேர்மைக் குணமிருந்தால் 
கிட்டவரும் வினைகளுமே 
எட்டிச்செல்லும் காண்பீரே .....!!!!

No comments:

Post a Comment