உருண்டு மிரட்டும் இடியின் ஒலியும்
நீண்டு கிளைபரப்பும் மின்னல் ஒளியும்
வான தொலைக்காட்சியில்
ஒலியும் ஒளியுமாய்.....
மழைக் கால இரவுகளில்
நட்சத்திர நிலாப் பெண்டிரின்
நேயர் விருப்பமாய் .....
தேனிசைச் சாரலாய் ....
இதயம் நனைக்கும் ....!
பார்வையாளர்கள் ....
பாரிலுள்ளோர் ......!!!
No comments:
Post a Comment