Thursday, April 2, 2015

ஆதலினால் ஊடல் தவிர் ....!!!




பூரணை நாளினில் பூனைக்கும் காதலாம் 
ஊரடங்கும் வேளையில் உல்லாசம் - வீரனே 
காதலில் வண்ணபேதம் காண்பது நன்றன்று 
ஆதலினால் ஊடல் தவிர் . 

பூரணை நாளினில் பூனைக்கும் காதலாம் 
ஊரடங்கும் வேளையில் உல்லாசம் - பூரணனே 
வேதங்கள் ஓதினும் வேண்டாம் துறவறம் 
ஆதலினால் காதல்செய் வாய்

No comments:

Post a Comment