பூரணை நாளினில் பூனைக்கும் காதலாம்
ஊரடங்கும் வேளையில் உல்லாசம் - வீரனே
காதலில் வண்ணபேதம் காண்பது நன்றன்று
ஆதலினால் ஊடல் தவிர் .
பூரணை நாளினில் பூனைக்கும் காதலாம்
ஊரடங்கும் வேளையில் உல்லாசம் - பூரணனே
வேதங்கள் ஓதினும் வேண்டாம் துறவறம்
ஆதலினால் காதல்செய் வாய்
No comments:
Post a Comment