Friday, April 10, 2015

அக்கச்சியும் அன்னையே ....!!



அரவணைக்கும் அக்காவும் 
அன்பில் அன்னைதான் 
அக்கறையாய் அளவளாவி 
அறிவூட்டி அகங்குளிர்வாள் ! 

அகங்காரம் அகத்திலில்லை 
அகம்பாவம் அவளுக்கில்லை 
அன்னபானம் அவளூட்ட 
அம்மாவின் அன்புதோற்கும் ! 

அச்சத்தால் அழுதாலும் 
அஞ்சலென அபயமளிப்பாள் 
அயர்ச்சியிலும் அசராது 
அனுகூலம் அருளிடுவாள் ! 

அடுக்கடுக்காய் அல்லல்வரினும் 
அடைக்கலமாய் அணைத்திடுவாள் 
அஞ்சனவிழியாள் அஞ்சுகமொழியாள் 
அழகுமயிலாள் அருமைகுணத்தாள் ! 

அத்தியின் அர்ப்பணிப்பு 
அபாரமானது அபரிமிதமானது 
அக்கச்சியும் அம்மாவே 
அகிலத்தில் அறிவீரே ...!!!

No comments:

Post a Comment