புத்திபோன போக்கிலே
புதைந்துநடை போடாதே !
புரியாத புதிராய்நீ
புகாருக் கிடமாகாதே ....!
போதைக்கு அடிமையாகி
பேயாட்டம் ஆடாதே !
போலியான சுகமது
போதுமென விட்டுவிடு ...!
கூடாநட்புடன் கூட்டுசேர்ந்து
கூசாமல் கூத்தடிக்காதே !
கூனிக்குறுகி போனபின்
கூம்பிவிடும் வாழ்க்கையே !
நிலையில்லாப் பிறவியில்
நீசத்தனம் செய்யாதே !
நிம்மதியின்றி திரிந்து
நிர்மூலன் ஆகிடுவாய் !
இழிவான செயல்களால்
ஈனத்தனம் புரியாதே !
இலட்சியத்தோடு வாழ்வதே
இலட்சணமென அறிந்துகொள் !
தீயசக்திக்கு என்றென்றும்
தீவிரமாய்த் துணைபோகாதே !
தீநாக்காய் பொசுக்கிடும்
தீய்ந்துவிடும் வாழ்க்கையே !
பெற்றோரே முதல் தெய்வம்
பேணிவாழப் பழகிக்கொள் !
முதியோரை அன்புடனே
மதித்துப்போற்ற கற்றுக்கொள் !
கட்டுக்கடங்கா மனதிற்கு
கடிவாளம் போட்டுக்கொள் !
தட்டுத் தடுமாறி போகாமல்
தன்னைத் தானே திருத்திக்கொள் !
சாதிக்கும் வேளையிலே
சரிவு வந்தால் சாயாதே !
சாகும்வரை போராடு
சரித்திரம் நீயாவாய் .....!!!
புதைந்துநடை போடாதே !
புரியாத புதிராய்நீ
புகாருக் கிடமாகாதே ....!
போதைக்கு அடிமையாகி
பேயாட்டம் ஆடாதே !
போலியான சுகமது
போதுமென விட்டுவிடு ...!
கூடாநட்புடன் கூட்டுசேர்ந்து
கூசாமல் கூத்தடிக்காதே !
கூனிக்குறுகி போனபின்
கூம்பிவிடும் வாழ்க்கையே !
நிலையில்லாப் பிறவியில்
நீசத்தனம் செய்யாதே !
நிம்மதியின்றி திரிந்து
நிர்மூலன் ஆகிடுவாய் !
இழிவான செயல்களால்
ஈனத்தனம் புரியாதே !
இலட்சியத்தோடு வாழ்வதே
இலட்சணமென அறிந்துகொள் !
தீயசக்திக்கு என்றென்றும்
தீவிரமாய்த் துணைபோகாதே !
தீநாக்காய் பொசுக்கிடும்
தீய்ந்துவிடும் வாழ்க்கையே !
பெற்றோரே முதல் தெய்வம்
பேணிவாழப் பழகிக்கொள் !
முதியோரை அன்புடனே
மதித்துப்போற்ற கற்றுக்கொள் !
கட்டுக்கடங்கா மனதிற்கு
கடிவாளம் போட்டுக்கொள் !
தட்டுத் தடுமாறி போகாமல்
தன்னைத் தானே திருத்திக்கொள் !
சாதிக்கும் வேளையிலே
சரிவு வந்தால் சாயாதே !
சாகும்வரை போராடு
சரித்திரம் நீயாவாய் .....!!!
No comments:
Post a Comment