Tuesday, April 7, 2015

வாழ்த்துவோம் வாங்க ...!!




வேப்பமரக் காற்று இதமாய் வீச
தேக்குமரத் தேகம் வருடலில் சிலிர்க்க
குயில்பாடும் கீதம் இதயம் நிறைக்க
தருவுதிர்த்த மலர்கள் வாழ்த்துகள் வழங்க
கனவில்வந்த கன்னி அகக்கண்ணில் விரிய
அவனவளை எண்ணி மனக்கோட்டை கட்ட
மெல்லிடையாள் வந்து அவனருகில் அமர
கட்டழகில் மயங்கி மார்போடு அணைக்க
கார்மேகம் திரண்டு வான்மேனி மறைக்க
ஆகாயத் தோட்டத்தில் மின்னல் பூப்பூக்க
பூத்தமின்னல் பறிக்க இடிசண்டை பிடிக்க
அடிதடியில் பயந்து முகில்கண்ணீர் வடிக்க
நனைத்தமழை காளை கண்டகனா கரைக்க
நாணத்தில் இதழில் குறுநகை மலர
நனவாக வேண்டு மெனவுள்ளம் விழைய
நல்லதே நடக்க வாழ்த்துவோம் வாங்க ...!!!

No comments:

Post a Comment