தென்னங் கீற்று உடலசைக்க
தென்றல் காற்று இடைதழுவ
வெள்ளி நிலவு புன்னகைக்க
வெள்ளை மேகம் அதைமறைக்க
மெல்லி டையாள் மனம்தவிக்க
மெழுகு வர்த்தி யாயுருக
கெண்டை விழிகள் படபடக்க
கெக்கலித் துள்ளம் பூரிக்க
செந்தமி ழில்கவி தைப்பிறக்க
செங்கம லம்போல் சிவந்திருக்க
நெருங்கி அவனரு கில்வந்து
நெற்றி முகர்ந்து ரசித்திருக்க
கன்னி மயிலாள் சிலிர்த்தெழுந்து
கண்ட கனவில் விழித்தனளே .... !
No comments:
Post a Comment