என் வீட்டு விட்டத்தை
உன் வீடாக்கினாய் !
வாடகை ஏதுமின்றி
குடித்தனம் பண்ணினாய் !!
வெளியேற்ற மனமில்லை !
கலைத்து விட தைரியமில்லை !
குடும்பம் சிதைந்து போகுமென
சிலர் சொல்லிச் சென்றதால்!!
நாளாக நாளாக
எம்முடன் நீயும் ஒன்றி விட்டாய் !
உன் சிங்காரக் குடிலுக்கு
பங்கம் ஏதும் வாராமல்
கண்ணின் இமைபோல்
காத்திருந்தோம் !!
கீச்கீச் ஒலியால் - எமை
மயக்கிவிட்டாய் !
உன் சிணுங்கல் கேளா எம் செவியும்
செவிடாய் எமக்குத் தோன்றிற்றே !
எத்தனையோ நீ பிரசவித்தாய் !
புது வரவு பார்த்துப் பூரித்தோம் !
குஞ்சுகள் சிறுகவே வாய் பிளக்க
உன் அலகை அழகாய் உள் நுழைத்து
இரையை ஊட்டிடும் காட்சி கண்டு
வீட்டில் யாவரும் ரசித்திடுவோம் !!
விதவிதமாய் உன்னை படமெடுத்தோம் !
கணிணியில் அதையும் சேமித்தோம் !
ஆறேழு மாதமாய் உனைக் காணாமல்
கண்ணெறு பட்டதோவென கவலையுற்றோம் !!
கைபேசிகோபுர கைங்கர்யத்தால்
சிட்டென நீயும் பறந்தனையோ ?
எம்மை நீயும் மறந்தனையோ ? - நீ
சொல்லாமல் போன மாயம் சொல்வாய் !!
எங்கே நான் சென்றுனைத் தேடுவேன் ?
நினைவுகள் நீளும் வேளையிலே
கணிணியில் உன் முகம் காண்கின்றேன் !
பலகணி திறந்து வைத்துக் காத்திருக்கின்றேன் !!
என் சிட்டுக்குருவியே..... !! நீ வருவாயென ........ !!!
உன் வீடாக்கினாய் !
வாடகை ஏதுமின்றி
குடித்தனம் பண்ணினாய் !!
வெளியேற்ற மனமில்லை !
கலைத்து விட தைரியமில்லை !
குடும்பம் சிதைந்து போகுமென
சிலர் சொல்லிச் சென்றதால்!!
நாளாக நாளாக
எம்முடன் நீயும் ஒன்றி விட்டாய் !
உன் சிங்காரக் குடிலுக்கு
பங்கம் ஏதும் வாராமல்
கண்ணின் இமைபோல்
காத்திருந்தோம் !!
கீச்கீச் ஒலியால் - எமை
மயக்கிவிட்டாய் !
உன் சிணுங்கல் கேளா எம் செவியும்
செவிடாய் எமக்குத் தோன்றிற்றே !
எத்தனையோ நீ பிரசவித்தாய் !
புது வரவு பார்த்துப் பூரித்தோம் !
குஞ்சுகள் சிறுகவே வாய் பிளக்க
உன் அலகை அழகாய் உள் நுழைத்து
இரையை ஊட்டிடும் காட்சி கண்டு
வீட்டில் யாவரும் ரசித்திடுவோம் !!
விதவிதமாய் உன்னை படமெடுத்தோம் !
கணிணியில் அதையும் சேமித்தோம் !
ஆறேழு மாதமாய் உனைக் காணாமல்
கண்ணெறு பட்டதோவென கவலையுற்றோம் !!
கைபேசிகோபுர கைங்கர்யத்தால்
சிட்டென நீயும் பறந்தனையோ ?
எம்மை நீயும் மறந்தனையோ ? - நீ
சொல்லாமல் போன மாயம் சொல்வாய் !!
எங்கே நான் சென்றுனைத் தேடுவேன் ?
நினைவுகள் நீளும் வேளையிலே
கணிணியில் உன் முகம் காண்கின்றேன் !
பலகணி திறந்து வைத்துக் காத்திருக்கின்றேன் !!
என் சிட்டுக்குருவியே..... !! நீ வருவாயென ........ !!!
No comments:
Post a Comment