Wednesday, April 29, 2015

காதல் மழை ...!!



மனங்குளிர மகிழ்ந்திருப்பார் மழைநனைத்த மரத்தடியில் 
கனவுலகில் கரங்கோர்த்து காதலுடன் கலந்திருப்பார் 
தவழ்தென்றல் தருதழுவ கிளையசைந்து நீர்தெளிக்க 
உவகையிலே உளம்சிலிர்க்க வைத்திடுமே காதல்மழை ! 

புல்வெளியில் அமர்ந்தபடி பேசிடுவார் புதுக்கதைகள் 
சொல்வனத்தில் கவிபடித்து உருகிமிக ரசித்திடுவார் 
கடற்கரையில் கால்நனைத்து மணலிழுக்க சிரித்திடுவார் 
மடல்விடுத்து பதில்கிடைக்க கமலமென மலர்ந்திடுவார் ! 

பிரிவுவந்த பொழுதினிலே நினைவுகளால் வாழ்ந்திருப்பார் 
மரித்திடவும் முடியாமல் தனிமையிலே விழிவடிப்பார் 
உரித்தான மெய்க்காதல் விலகாமல் சேர்ந்திடுமோ 
புரிந்ததுவும் பெய்திடுமோ பொய்த்திடுமோ காதல்மழை .....??? 

No comments:

Post a Comment