மனங்குளிர மகிழ்ந்திருப்பார் மழைநனைத்த மரத்தடியில்
கனவுலகில் கரங்கோர்த்து காதலுடன் கலந்திருப்பார்
தவழ்தென்றல் தருதழுவ கிளையசைந்து நீர்தெளிக்க
உவகையிலே உளம்சிலிர்க்க வைத்திடுமே காதல்மழை !
புல்வெளியில் அமர்ந்தபடி பேசிடுவார் புதுக்கதைகள்
சொல்வனத்தில் கவிபடித்து உருகிமிக ரசித்திடுவார்
கடற்கரையில் கால்நனைத்து மணலிழுக்க சிரித்திடுவார்
மடல்விடுத்து பதில்கிடைக்க கமலமென மலர்ந்திடுவார் !
பிரிவுவந்த பொழுதினிலே நினைவுகளால் வாழ்ந்திருப்பார்
மரித்திடவும் முடியாமல் தனிமையிலே விழிவடிப்பார்
உரித்தான மெய்க்காதல் விலகாமல் சேர்ந்திடுமோ
புரிந்ததுவும் பெய்திடுமோ பொய்த்திடுமோ காதல்மழை .....???
கனவுலகில் கரங்கோர்த்து காதலுடன் கலந்திருப்பார்
தவழ்தென்றல் தருதழுவ கிளையசைந்து நீர்தெளிக்க
உவகையிலே உளம்சிலிர்க்க வைத்திடுமே காதல்மழை !
புல்வெளியில் அமர்ந்தபடி பேசிடுவார் புதுக்கதைகள்
சொல்வனத்தில் கவிபடித்து உருகிமிக ரசித்திடுவார்
கடற்கரையில் கால்நனைத்து மணலிழுக்க சிரித்திடுவார்
மடல்விடுத்து பதில்கிடைக்க கமலமென மலர்ந்திடுவார் !
பிரிவுவந்த பொழுதினிலே நினைவுகளால் வாழ்ந்திருப்பார்
மரித்திடவும் முடியாமல் தனிமையிலே விழிவடிப்பார்
உரித்தான மெய்க்காதல் விலகாமல் சேர்ந்திடுமோ
புரிந்ததுவும் பெய்திடுமோ பொய்த்திடுமோ காதல்மழை .....???
No comments:
Post a Comment