Thursday, April 9, 2015

தமிழே என்னுள் நீ ....!!


உதிரத்தில் தமிழ் நதியாய் பாயும் ! 
உச்சரிப்பில் தமிழ் கொஞ்சி விளையாடும் ! 

உதட்டில் தமிழ் சிந்துகவி பாடும் ! 
உவகையில் தமிழ் ஊற்றாய் பெருகும் ! 

உற்சாகத்தில் தமிழ் சிங்கநடை போடும் ! 
உயர்வில் தமிழ் நாளும் வெல்லும் ! 

உலகில் தமிழ் வாகை சூடும் ! 
உண்மையில் தமிழ் முதலாய் விளங்கும் ! 

உணர்வில் தமிழ் பூரித்து பொங்கும் ! 
உரிமையில் தமிழ் உறவாய் வாழும் ! 

உணர்ச்சியில் தமிழ் புரட்சி புரியும் ! 
உதயத்தில் தமிழ் அருவியாய் பொழியும் ! 

உயர்ச்சியில் தமிழ் சிகரம் எட்டும் ! 
உவமையில் தமிழ் அழகாய் சிறக்கும் ! 

உருவத்தில் தமிழ் அன்னையாய் தெரியும் ! 
உள்ளத்தில் தமிழ் ஓயாது ஒலிக்கும் ! 

உழைப்பில் தமிழ் களைப்பு நீக்கும் ! 
உறுதியில் தமிழ் தாயாய்த் தாங்கும் ! 

உடலில் தமிழ் எங்கும் உறையும் ! 
உயிரில் தமிழ் கலந்தே நிறையும் ...!!

No comments:

Post a Comment