Wednesday, October 28, 2015
Tuesday, October 27, 2015
தனிமையுணர்வை மாற்றினாள் ....!!
சன்ன லோர இருக்கையில்
***சாய்ந்துக் கண்ணை மூடினாள்!
என்ன இந்த வாழ்வென
***எரிச்சல் கொண்டு வாடினாள்!
அன்புக் காட்டி மறுத்தவன்
***அமைதி பறித்துப் போகவே
சின்ன மனத்தில் வேதனை
***சிறகு விரிக்க ஏங்கினாள்!
கன்னந் தழுவும் தென்றலால்
***களைப்பு மெல்ல நீங்கினாள்!
புன்ன கையைத் தொலைத்தவள்
***புதிதாய் மூச்சு வாங்கினாள்!
தன்கை என்று முதவிடும்
***தவித்த நெஞ்சைத் தேற்றினாள்!
தன்னம் பிக்கைத் துணைவர
***தனிமை யுணர்வை மாற்றினாள்...!!!
Saturday, October 24, 2015
காதல் பாக்கள் வடிக்குது ....!!!
பட்டுக் கன்னம் தொட்டுத் தீண்டப்
***பாச நெஞ்சம் துடிக்குது !
கட்டிப் போட்ட கையி னாலே
***காதல் பாக்கள் வடிக்குது !
எட்டி நின்று பார்க்கும் கண்ணில்
***ஏக்கம் மட்டும் தெரியுது !
விட்டுச் செல்ல வுள்ள மின்றி
***வீட்டுக் குள்ளே மறையுதே !!
(எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா விளம் )
***பாச நெஞ்சம் துடிக்குது !
கட்டிப் போட்ட கையி னாலே
***காதல் பாக்கள் வடிக்குது !
எட்டி நின்று பார்க்கும் கண்ணில்
***ஏக்கம் மட்டும் தெரியுது !
விட்டுச் செல்ல வுள்ள மின்றி
***வீட்டுக் குள்ளே மறையுதே !!
(எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா விளம் )
Tuesday, October 20, 2015
Thursday, October 15, 2015
Wednesday, October 14, 2015
நீங்கா திருப்பாய் நிறைந்து .....!!! ( அந்தாதி வெண்பாக்கள் )
கருணை விழியால் கனிவுடன் நோக்கி
வருந்துயர் போக்குவாள் மாரி !- விரும்பி
வணங்கு மடியவர் வாழ்வி னொளியாய்
இணங்கி யருள்வாள் இனிது .
இனியவள் காட்டிடும் ஈடிலா அன்பில்
பனித்திடும் கண்கள் பரிவாய் !- செனித்த
பிறவியில் தாயவள் பேரருள் கிட்ட
சிறந்திடும் வாழ்வும் தெளிந்து .
தெளிந்த அறிவுடன் தேவியை எண்ண
எளிதாய் வருவாள் இறங்கி ! - ஒளிரும்
சுடரிலும் தோன்றியே சூலினி காப்பாள்
இடர்வரின் சிட்டாய் எழுந்து .
எழுந்தோடி வந்தாய் எளியேனைக் காக்க
தொழுதவென் துன்பம் தொலைத்தாய் ! - விழுதாகத்
தாங்கினாய்த் தாயே! தயாபரியே! என்றென்றும்
நீங்கா திருப்பாய் நிறைந்து .
Tuesday, October 13, 2015
வரமெனக் கொள்வோமே ....!!!
விளம்பர மில்லாப் பொருட்களும் பெரிதாய்
***விற்பனை யாவதுண்டோ ?
களம்பல கண்ட மன்னனும் போரில்
***கடைசியில் தோற்பதுண்டோ ?
குளத்திடை சேற்றில் பூப்பினும் கமலம்
***கோயிலில் மறுப்பதுண்டோ ?
வளமிகு பாக்கள் வழங்கிடும் எழுத்தை
***வரமெனக் கொள்வோமே !
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( விளம் + மா +விளம் +மா
விளம் + காய் )
***விற்பனை யாவதுண்டோ ?
களம்பல கண்ட மன்னனும் போரில்
***கடைசியில் தோற்பதுண்டோ ?
குளத்திடை சேற்றில் பூப்பினும் கமலம்
***கோயிலில் மறுப்பதுண்டோ ?
வளமிகு பாக்கள் வழங்கிடும் எழுத்தை
***வரமெனக் கொள்வோமே !
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( விளம் + மா +விளம் +மா
விளம் + காய் )
யாப்பதன் மேன்மை காப்போம் !
பாவலர் பயிற்சி கண்டேன்
***பைந்தமிழ்ச் சோலை தன்னில் !
பூவனச் சுகந்தம் போலே
***பொற்புடன் மணக்கக் கண்டேன் !
ஆவலாய்க் கற்க நானும்
***அன்புடன் இணைந்து விட்டேன் !
யாவரும் பயில வாரீர்
***யாப்பதன் மேன்மை காப்போம் !
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( விளம் + மா + தேமா )
***பைந்தமிழ்ச் சோலை தன்னில் !
பூவனச் சுகந்தம் போலே
***பொற்புடன் மணக்கக் கண்டேன் !
ஆவலாய்க் கற்க நானும்
***அன்புடன் இணைந்து விட்டேன் !
யாவரும் பயில வாரீர்
***யாப்பதன் மேன்மை காப்போம் !
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( விளம் + மா + தேமா )
ஒளிரும் தமிழே ....!!!
செந்தமிழ்ப் பாட்டு கேட்டால்
***செவியொடு குளிரு முள்ளம் !
சிந்தையில் மகிழ்ச்சி வெள்ளம்
***செம்மையாய்ப் பொங்கிப் பாயும் !
சந்தமும் கொஞ்சிக் கூட
***சந்தன மணமும் தோற்கும் !
சுந்தரத் தமிழே என்றும்
***சொக்கிட வைக்கும் தேனே !
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( விளம் + மா + தேமா )
***செவியொடு குளிரு முள்ளம் !
சிந்தையில் மகிழ்ச்சி வெள்ளம்
***செம்மையாய்ப் பொங்கிப் பாயும் !
சந்தமும் கொஞ்சிக் கூட
***சந்தன மணமும் தோற்கும் !
சுந்தரத் தமிழே என்றும்
***சொக்கிட வைக்கும் தேனே !
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( விளம் + மா + தேமா )
காதலில் விழுந்த பின்னே ...!!
கண்களும் கதைகள் பேசும்
***காதலில் விழுந்த பின்னே !
உண்பதும் மறந்தேப் போகும்
***உள்ளமும் மிதக்கும் தன்னால் !
எண்ணிலாக் கனவு வந்தே
***இன்பயாழ் மீட்டிச் செல்லும் !
வண்ணமாய் யாவும் தோன்றும்
***வசந்தமாய்ச் சிறக்கும் வாழ்வே !
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
(விளம் + மா + தேமா )
***காதலில் விழுந்த பின்னே !
உண்பதும் மறந்தேப் போகும்
***உள்ளமும் மிதக்கும் தன்னால் !
எண்ணிலாக் கனவு வந்தே
***இன்பயாழ் மீட்டிச் செல்லும் !
வண்ணமாய் யாவும் தோன்றும்
***வசந்தமாய்ச் சிறக்கும் வாழ்வே !
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
(விளம் + மா + தேமா )
துடித்திடும் இதயம் பூத்திடுமோ ?
கவலை வாட்டி வதைக்கும் போது
***கனவிலும் களிப்பு வந்திடுமோ ?
துவளும் நெஞ்சம் துணிவை யிழக்க
***துடித்திடும் இதயம் பூத்திடுமோ ?
அவலங் கண்டும் அமைதி காக்கும்
***அடக்கமும் பேரைத் தந்திடுமோ ?
உவகை பொங்கும் நாளை எண்ணி
***உறுதியாய் உள்ளம் காத்திடுமோ ??
***கனவிலும் களிப்பு வந்திடுமோ ?
துவளும் நெஞ்சம் துணிவை யிழக்க
***துடித்திடும் இதயம் பூத்திடுமோ ?
அவலங் கண்டும் அமைதி காக்கும்
***அடக்கமும் பேரைத் தந்திடுமோ ?
உவகை பொங்கும் நாளை எண்ணி
***உறுதியாய் உள்ளம் காத்திடுமோ ??
வெட்கியேப் பூத்தனளே ....!!!
கண்களில் மின்னல் காந்தமாய்க் கவரக்
***காதலில் விழுந்துவிட்டான் !
பெண்ணவள் அழகில் சொக்கியே அவனும்
***பித்தனாய் மாறிவிட்டான் !
எண்ணிலாப் பாக்கள் இனிமையாய் வடித்து
***எண்ணமும் சொல்லிவிட்டான் !
வெண்மதி முகத்தாள் மெல்லிடைத் துவள
***வெட்கியேப் பூத்தனளே !
( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( விளம் மா விளம் மா விளம் காய் )
Subscribe to:
Posts (Atom)