பள்ளிக்கூடம் சென்றதில்லை
புத்தகமும் புரட்டவில்லை
தோளில்பை சுமந்ததில்லை
தோழனொடுகை கோர்த்ததில்லை !
சீருடையும் அணிந்ததில்லை
சிரித்தரட்டை அடித்ததில்லை
வீட்டுப்பாடம் செய்ததில்லை
விரலெழுதி வலித்ததில்லை !
கண்முழித்துப் படித்ததில்லை
கனவிலுமிது நடந்ததில்லை
தேர்வுநானும் எழுதவில்லை
தேர்ச்சியெனக்கு கிடைக்கவில்லை !
ஏழையாய்ப் பிறந்துவிட்டால்
ஏற்றம்வாழ்வில் வாராதோ
ஏக்கமுடன் கேட்கின்றேன்
ஏட்டுக்கல்வி எனக்கும்வேண்டும் !
பாடசாலைப் போகவேண்டும்
பாடம்நானும் படிக்கவேண்டும்
தாயழைத்துச் செல்லவேண்டும்
தன்கையால்சோறு ஊட்டவேண்டும் !
ஓடிவிளை யாடவேண்டும்
ஓய்வும்கொஞ்சம் எடுக்கவேண்டும்
மதிப்பெண்நிறைய வாங்கவேண்டும்
மதிப்பாய்நானும் வாழவேண்டும் !
அன்றாடப் பாடங்களை
அன்றன்றே படிக்கவேண்டும்
ஆசைகள்யாவும் ஈடேற
ஆண்டவனின் அருள்வேண்டும் ....!!!
புத்தகமும் புரட்டவில்லை
தோளில்பை சுமந்ததில்லை
தோழனொடுகை கோர்த்ததில்லை !
சீருடையும் அணிந்ததில்லை
சிரித்தரட்டை அடித்ததில்லை
வீட்டுப்பாடம் செய்ததில்லை
விரலெழுதி வலித்ததில்லை !
கண்முழித்துப் படித்ததில்லை
கனவிலுமிது நடந்ததில்லை
தேர்வுநானும் எழுதவில்லை
தேர்ச்சியெனக்கு கிடைக்கவில்லை !
ஏழையாய்ப் பிறந்துவிட்டால்
ஏற்றம்வாழ்வில் வாராதோ
ஏக்கமுடன் கேட்கின்றேன்
ஏட்டுக்கல்வி எனக்கும்வேண்டும் !
பாடசாலைப் போகவேண்டும்
பாடம்நானும் படிக்கவேண்டும்
தாயழைத்துச் செல்லவேண்டும்
தன்கையால்சோறு ஊட்டவேண்டும் !
ஓடிவிளை யாடவேண்டும்
ஓய்வும்கொஞ்சம் எடுக்கவேண்டும்
மதிப்பெண்நிறைய வாங்கவேண்டும்
மதிப்பாய்நானும் வாழவேண்டும் !
அன்றாடப் பாடங்களை
அன்றன்றே படிக்கவேண்டும்
ஆசைகள்யாவும் ஈடேற
ஆண்டவனின் அருள்வேண்டும் ....!!!
No comments:
Post a Comment