Tuesday, April 7, 2015

மறுப்பதேன் அன்பு மானே ....!!



அடிக்கரும்பின் இனிப்பாய் பேசி 
******அடிமனதை வருடியவளே ...!! 

துடிதுடிக்கும் விழியால் மெல்ல 
******நெஞ்சத்தை துளைத்தவளே .....!! 

வடித்தசிலை போலும் பொலிவில் 
******வண்ணத்தைக் குழைத்தவளே ....!! 

கொடியிடை மடிப்பின் அழகால் 
******கிரங்கிடச் செய்தவளே ....!! 

விடியலில் புள்ளிக் கோலமிட்டு 
******விழிவிருந்து படைத்தவளே .....!! 

செடிதனில் அசையும் மலராய் 
******சிரித்தே மயக்குபவளே .....!! 

மடிதனில் ஓரிடம் கேட்க 
******மறுப்பதேன் அன்புமானே .....!!

No comments:

Post a Comment