Monday, April 6, 2015

மழலை இன்பம் மங்காத செலவம் ...!!!



கள்ளமில்லாப் பிள்ளை உள்ளம் 
கடவுள் வாழும் கருணை இல்லம் 
கவலையில்லா மழலைப் பருவம் 
கன்னல்போலும் இனிக்கும் திண்ணம் ! 

குறும்புத்தனத்தில் கபடம் இல்லை 
குழந்தைமனமே அன்பின் எல்லை 
குணத்திலென்றும் சிரிக்கும் முல்லை 
குழந்தையில்லா குடும்பம் தொல்லை ! 

தவழ்ந்துசெல்லும் தங்க ரதம் 
தழுவியணைக்க விழையும் மனம் 
தத்திநடக்கும் தந்தச் சிலை 
தரணியில் பிள்ளைக்கேது விலை ? 

சுட்டிப்பேச்சு செவிக்கு விருந்து 
சுருட்டும்நோய்க்கு அதுவே மருந்து 
சுழலுமுலகில் குழவி வரமே 
சுருங்கச்சொன்னால் மழலை இறையே !!

No comments:

Post a Comment