அன்பால் எனை ஆளவந்த திருமகளே !
இன்சொல்லால் எம்மை வசீகரித்தாய் ...
புன்முறுவலுடன் பணி புரிந்தாய் ...
பின்தூங்கி முன் விழித்தாய் ....!!
அயர்வின்றி அடுக்களையில் வேலை செய்தாய் !
ஆளுக்கொரு விதமாய் சமைத்துக் கொடுத்தாய்!
அன்பாய் நம் பிள்ளைகளை அரவணைத்தாய் !
அருமையாய் என் தாய்தந்தை சேவித்தாய் ...!
ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளி வீசினாலும்
அமைதிகாத்து என்னை நாண வைத்தாய் !
தப்பேதும் நடந்தால் தப்பாமல் தப்பை
சுட்டிக்காட்டி தப்பினி நடவாது தடுத்தாய் !
துளிர்த்த வியர்வை துடைக்கவும் மறந்து
துரித கதியில் தேனியாய் சுழன்றாய் ...!
துயர் வந்தபோது தோள் கொடுத்தாய் !
துலாக் கோலாய் நியாயம் காத்தாய் !
கோபத்திலும் நிதானமாய் செயல் பட்டாய் !
சோகத்தையும் சுகமான சுமையாய் சுமந்தாய் !
சோதனையைத் துணிந்து எதிர் கொண்டாய் !
வேதனையை வந்தவழி விரட்டி அடித்தாய் !
நீ சலித்து நான் பார்த்ததில்லை ...
நான் கேட்டு நீ மறுத்ததில்லை ...
நீ வேண்டும் இனிவரும் பிறவியும்.....
பொன்மகளே உன் சம்மதம் தருவாயா .....???
இன்சொல்லால் எம்மை வசீகரித்தாய் ...
புன்முறுவலுடன் பணி புரிந்தாய் ...
பின்தூங்கி முன் விழித்தாய் ....!!
அயர்வின்றி அடுக்களையில் வேலை செய்தாய் !
ஆளுக்கொரு விதமாய் சமைத்துக் கொடுத்தாய்!
அன்பாய் நம் பிள்ளைகளை அரவணைத்தாய் !
அருமையாய் என் தாய்தந்தை சேவித்தாய் ...!
ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளி வீசினாலும்
அமைதிகாத்து என்னை நாண வைத்தாய் !
தப்பேதும் நடந்தால் தப்பாமல் தப்பை
சுட்டிக்காட்டி தப்பினி நடவாது தடுத்தாய் !
துளிர்த்த வியர்வை துடைக்கவும் மறந்து
துரித கதியில் தேனியாய் சுழன்றாய் ...!
துயர் வந்தபோது தோள் கொடுத்தாய் !
துலாக் கோலாய் நியாயம் காத்தாய் !
கோபத்திலும் நிதானமாய் செயல் பட்டாய் !
சோகத்தையும் சுகமான சுமையாய் சுமந்தாய் !
சோதனையைத் துணிந்து எதிர் கொண்டாய் !
வேதனையை வந்தவழி விரட்டி அடித்தாய் !
நீ சலித்து நான் பார்த்ததில்லை ...
நான் கேட்டு நீ மறுத்ததில்லை ...
நீ வேண்டும் இனிவரும் பிறவியும்.....
பொன்மகளே உன் சம்மதம் தருவாயா .....???
No comments:
Post a Comment