Friday, April 3, 2015

வா கண்ணா ....!!!




சின்னச்சின்னப் பதம் வைத்து 
சிங்காரமாய் வா கண்ணா ...! 
சிரசில் சின்ன பீலியுடன் 
சிரித்தபடியே வா கண்ணா .....!! 

புல்லாங் குழலை ஊதியே 
பூரிப்புடனே வா கண்ணா ...! 
புன்னகை மெல்ல பூத்தபடி 
பொடிநடை போட்டு வா கண்ணா ....!! 

பால்கோவா முறுக்கு சீடை 
பட்சணமுண்ண வா கண்ணா ...! 
பக்தர் இதயத்தில் பாலகனாய் 
கொலுவிருக்க வா கண்ணா ....!! 

வெண்ணைத் திருடித் தின்றிடவே 
வேகமாக வா கண்ணா ...! 
வேணுகானம் இசைத்த படி 
விளையாடிமகிழ வா கண்ணா ...!! 

பாதம் வரைந்த பாதைவழி 
பொற்பாதம் பதித்து வா கண்ணா ...! 
பொன்னூஞ்சல் ஆடி இன்புறவே 
பொழுதுடன் சீக்கிரம் வா கண்ணா ...!!

No comments:

Post a Comment