ஆழிப் பேரலை ஆர்ப்பரித்து எழுந்து
கோரத் தாண்டவம் ஆடிட வேண்டாம் .....!
பூமா தேவியும் சிலிர்த்து நிமிர்ந்து
பூகம்ப மாய் வெடித்திட வேண்டாம் .....!
குமுறிக் கொந்தளித்து தீக் குழம்பை
எரிமலை என்றும் கக்கிட வேண்டாம் ....!
வெள்ளம் பெருகி கரையை உடைத்து
ஆறும் சேதம் விளைத்திட வேண்டாம் !
நிலச்சரிவால் மலையில் பாறைகள் உருண்டு
பாதை வழியும் தடைபட வேண்டாம் ....!
சாகரம் பொங்கிச் சீற்றம் கொண்டு
ஊரைச் சுருட்டும் சாகசம் வேண்டாம் ....!
வீசும் காற்றும் சூறா வளியாய்
சுழன்று சூறை யாட வேண்டாம் ....!
உறைபனிப் பொழிவால் நிலமும்மூடும்
நிலைமை உலகில் இனியும்வேண்டாம் ...!
பேய்மழை விடாது கொட்டித் தீர்த்து
பேரிடர் புரியும் அவலம் வேண்டாம் ....!
வைரக் கீற்றாய் பளிச்சென ஒளிர்ந்து
மின்னல் பார்வை பறித்திடல் வேண்டாம் ...!
மேகமோதலில் செவியைச் செவிடாக்கும்
இடியும் உயிர்ப்பலி வாங்கிட வேண்டாம் ..!
அணுஅணுவாய் ரசிக்கவைக்கும் இயற்கையே !
சீற்ற முறாமல் சாந்தமாய் இரு ......!!!!
கோரத் தாண்டவம் ஆடிட வேண்டாம் .....!
பூமா தேவியும் சிலிர்த்து நிமிர்ந்து
பூகம்ப மாய் வெடித்திட வேண்டாம் .....!
குமுறிக் கொந்தளித்து தீக் குழம்பை
எரிமலை என்றும் கக்கிட வேண்டாம் ....!
வெள்ளம் பெருகி கரையை உடைத்து
ஆறும் சேதம் விளைத்திட வேண்டாம் !
நிலச்சரிவால் மலையில் பாறைகள் உருண்டு
பாதை வழியும் தடைபட வேண்டாம் ....!
சாகரம் பொங்கிச் சீற்றம் கொண்டு
ஊரைச் சுருட்டும் சாகசம் வேண்டாம் ....!
வீசும் காற்றும் சூறா வளியாய்
சுழன்று சூறை யாட வேண்டாம் ....!
உறைபனிப் பொழிவால் நிலமும்மூடும்
நிலைமை உலகில் இனியும்வேண்டாம் ...!
பேய்மழை விடாது கொட்டித் தீர்த்து
பேரிடர் புரியும் அவலம் வேண்டாம் ....!
வைரக் கீற்றாய் பளிச்சென ஒளிர்ந்து
மின்னல் பார்வை பறித்திடல் வேண்டாம் ...!
மேகமோதலில் செவியைச் செவிடாக்கும்
இடியும் உயிர்ப்பலி வாங்கிட வேண்டாம் ..!
அணுஅணுவாய் ரசிக்கவைக்கும் இயற்கையே !
சீற்ற முறாமல் சாந்தமாய் இரு ......!!!!
No comments:
Post a Comment