Tuesday, April 7, 2015

கவிதை வடிக்கும் சிறுவிரல்கள் ....!!



மேக அலைகள் மெல்லத் தவழ்ந்து 
மேனி தழுவும் அந்தி மாலைகள் ! 

தேக சிலிர்ப்பில் தென்றல் இணைந்து 
தேசு லாவிடும் மதுர வேளைகள் ! 

பொழியும் பனியும் என்பு துளைக்க 
பொங்கித் ததும்பும் நினை வலைகள் ! 

கூதல் நடுக்க ஊடல் தொலைந்து 
கூடல் நிகழ்த்தும் நடு நிசிகள் ! 

ஆம்பல் மலராய் இதயம் விரிய 
ஆனந்தக் களிப்பில் விழித் துளிகள் ! 

கற்பனை வானில் சிறகு விரிந்து 
கவிதை வடிக்கும் சிறு விரல்கள் ...!!

No comments:

Post a Comment