Sunday, April 19, 2015

விடை பெற்றனையோ ....??


விசேடம் என்றாலும் 
விசனம் என்றாலும் - தகவல் 
விநியோகிக்கும் தந்தியே .....! 
விரைவுக்கு எடுத்துக்காட்டாய் 
விளித்தோமே உன்னையே ...! 

ஒன்றரை நூற்றாண்டு கடந்தும் 
ஒப்பிலா பணி புரிந்தாய் ...! 
சேவை செய்து முடித்து விட்டாய் ! 
தேவை எமக்கு போதுமட்டும்....!! 

விருப்ப ஓய்வு எடுக்கவில்லை 
விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் 
விரல் சொடுக்கில் உன் பணியும் 
வினாடியில் முடிவதனால் 
விடுதலையே கொடுத்து விட்டோம் 
விடை நீயும் பெற்றிடுவாய் ...! 

பழையன கழித்து புதியன புகுதல் 
காலத்தின் கட்டாயமன்றோ ....? 
காலாவதி நீ ஆனாலும் 
காலம் கடந்தும் நினைவில் நிற்பாய்....!!!

No comments:

Post a Comment