Friday, April 10, 2015

என்ன செய்ய ....சொல்வீரே ....???



களிமண்ணில் பிடித்து வைத்து 
>>>>>கடவுளென்று கும்பிடுவார் ! 
கருவில் சுமந்து வளர்த்தவளை 
>>>>>நிர்கதியாய் விட்டிடுவார் ...!! 

பிடித்த நடிகர் கட்அவுட்டுக்கு 
>>>>>பாலபிஷேகம் பண்ணிடுவார் ! 
பசியால் குழந்தை அழுதாலும் 
>>>>>பாராமுகமாய் சென்றிடுவார் ...!! 

மதுவிலக்கு பற்றி மேடையிலே 
>>>>>வாய்கிழியப் பேசிடுவார் ! 
மாலைப்பொழுது கழிந்து விட்டால் 
>>>>>மதுகுடித்து சரிந்திடுவார் ...!! 

அன்னை மொழிக்கீ டில்லையென 
>>>>>அழுத்தமாகச் சொல்லிடுவார் ! 
ஆங்கில வழிப் பள்ளியிலே 
>>>>>அவர்பிள்ளை படித்திடுவார் ...!! 

லஞ்சம் பெறுவது குற்றமென 
>>>>>லட்சியத்துடன் முழங்கிடுவார் ! 
லட்சங்கள் வாரிக்கொடுத்து 
>>>>>காரியம்நிறை வேற்றிக்கொள்வார் ...!! 

பகுத்தறிவு வாதி போல 
>>>>>பக்குவமாய் தெரிந்திடுவார் ! 
பூனை குறுக்கே வந்திடிலோ 
>>>>>அபசகுனமாய் கருதிடுவார் ...!! 

முகத்தைமூடி மறைத்துக் கொள்ள 
>>>>>முகமூடி மாட்டிடலாம் ! 
முரணான மனம் மறைக்க 
>>>>>என்னசெய்ய சொல்வீரே ...???

No comments:

Post a Comment