வான் மகளின் பரந்த நெற்றியில்
ஒளிரும் பொன் வண்ணப் பொட்டானாய் !
தேன் சிந்தும் இன்னிசை மெட்டுக்களில்
இளமை ததும்பும் சந்தமானாய் !!
பஞ்சுபோலும் மஞ்சு கூட்டத்தினூடே
கண்ணாமூச்சி ஆடலானாய் !
கொஞ்சுமொழி குமரியர்க்கு
உவமை கூறும் பொருளானாய் !!
காதலர்கள் கனவிற்கு வித்தானாய் !
கவிஞர்தம் கற்பனைக்கு உரமானாய் !
அன்னமூட்டும் அன்னையர்க்கு கதைக்கருவானாய்
அடம்பிடிக்கும் மழலையற்கு காட்சிப்படமானாய்!!
பூரணநிலவாய் இதழ் பூத்துச் சிரிக்கின்றாய் !
பூவுலக மாந்தர் பூரிக்க நடமிடுகின்றாய் !
திங்கள்ஒருமுறையே உன் வதனம் காட்டுகின்றாய்
தங்கப் பூரணையே !! உனை முத்தமிழால் வாழ்த்திடுவேன் !!!
ஒளிரும் பொன் வண்ணப் பொட்டானாய் !
தேன் சிந்தும் இன்னிசை மெட்டுக்களில்
இளமை ததும்பும் சந்தமானாய் !!
பஞ்சுபோலும் மஞ்சு கூட்டத்தினூடே
கண்ணாமூச்சி ஆடலானாய் !
கொஞ்சுமொழி குமரியர்க்கு
உவமை கூறும் பொருளானாய் !!
காதலர்கள் கனவிற்கு வித்தானாய் !
கவிஞர்தம் கற்பனைக்கு உரமானாய் !
அன்னமூட்டும் அன்னையர்க்கு கதைக்கருவானாய்
அடம்பிடிக்கும் மழலையற்கு காட்சிப்படமானாய்!!
பூரணநிலவாய் இதழ் பூத்துச் சிரிக்கின்றாய் !
பூவுலக மாந்தர் பூரிக்க நடமிடுகின்றாய் !
திங்கள்ஒருமுறையே உன் வதனம் காட்டுகின்றாய்
தங்கப் பூரணையே !! உனை முத்தமிழால் வாழ்த்திடுவேன் !!!
No comments:
Post a Comment