Thursday, November 26, 2015
Sunday, November 15, 2015
நின் புகழ் வாழுமே நீடு !
தன்னல மில்லாத் தகைமையிற் சீலரே
தன்னடக் கத்தின் தலைமகனே ! - அன்புடன்
தன்னம்பிக் கையூட்டிச் சாதிக்கச் செய்தவரே
நின்புகழ் வாழுமே நீடு !
தன்னடக் கத்தின் தலைமகனே ! - அன்புடன்
தன்னம்பிக் கையூட்டிச் சாதிக்கச் செய்தவரே
நின்புகழ் வாழுமே நீடு !
வல்லரசாய்த் தாய்நாட்டை மாற்ற வழிகாட்டி
நல்லறி வூட்டிய நாயக !- செல்லுமிட
மெல்லாம்நீ மாணவரு ளேற்றிய ஞானவொளி
வெல்லு முலகில் மிளிர்ந்து .
நல்லறி வூட்டிய நாயக !- செல்லுமிட
மெல்லாம்நீ மாணவரு ளேற்றிய ஞானவொளி
வெல்லு முலகில் மிளிர்ந்து .
கண்ணியத் தோடு கடமைக ளாற்றியே
மண்ணில்நற் பேரெடுத்த வல்லவரே !- உண்மையில்
எண்ணிவியக் கின்றோம் எளிமையின் உச்சமே
விண்சென்றா யெம்மையழ விட்டு .
மண்ணில்நற் பேரெடுத்த வல்லவரே !- உண்மையில்
எண்ணிவியக் கின்றோம் எளிமையின் உச்சமே
விண்சென்றா யெம்மையழ விட்டு .
இன்முக வித்தகர் ஏவுகணை நாயகர்
அன்பில் கலாமும் அதிசயமே ! - அன்னார்
கனவைமெய்ப் பிக்க கனவுகள் கண்டே
நனவாக்கு வோமின்றே நாம் .
அன்பில் கலாமும் அதிசயமே ! - அன்னார்
கனவைமெய்ப் பிக்க கனவுகள் கண்டே
நனவாக்கு வோமின்றே நாம் .
வித்தை விதைத்தீர் விருட்ச மெனவளர்வோம்
முத்தாய் ஒளிர்வோம் முதன்மையாய் - நித்தமும்
சத்திய மாய்முயன்று சாதிப்போம்! எண்ணத்தில்
உத்தம!நீ யெம்மை உயர்த்து .
முத்தாய் ஒளிர்வோம் முதன்மையாய் - நித்தமும்
சத்திய மாய்முயன்று சாதிப்போம்! எண்ணத்தில்
உத்தம!நீ யெம்மை உயர்த்து .
தூய்மையின் சின்னமாய்ச் சோர்வின்றித் தன்பணியில்
வாய்மையே கொள்கையாய் வாழ்ந்தவ ! - மாய்ந்தவுனைத்
தாய்மடி போலவே தன்னுள்ளே தாங்கிட
பேய்க்கரும்புப் பெற்றதோ பேறு ?
வாய்மையே கொள்கையாய் வாழ்ந்தவ ! - மாய்ந்தவுனைத்
தாய்மடி போலவே தன்னுள்ளே தாங்கிட
பேய்க்கரும்புப் பெற்றதோ பேறு ?
( துபாய் தமிழர் சங்கமம் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டி -2015 - ல்
முதல் சுற்றில் தேர்வானக் கவிதை )
Thursday, November 12, 2015
Wednesday, November 11, 2015
Saturday, November 7, 2015
Thursday, November 5, 2015
வரந்தரும் விநாயகா ....!! ( பாடல் )
பல்லவி
`````````````
மங்களம் பொங்கிட வரந்தரும் விநாயகா
எங்களுக் கருளவே இக்கணம் வருகவே !
அனுபல்லவி
~~~~~~~~~~~~
திங்களும் கங்கையும் சிரசினில் சூடிய
சங்கரன் மைந்தனே சண்முகன் சோதரா !
சரணம்
````````````
மோதகப் பிரியனே மூஷிக வாகனா
பாதமும் பணிந்திட பரிவுடன் காத்திடு
சோதனை போதுமெம் சுமைகளைத் தாங்கிடு
வேதனை நீக்கிடு விக்கின விநாயகா !
( விளச்சீர்களால் அமைந்த பாடல் )
`````````````
மங்களம் பொங்கிட வரந்தரும் விநாயகா
எங்களுக் கருளவே இக்கணம் வருகவே !
அனுபல்லவி
~~~~~~~~~~~~
திங்களும் கங்கையும் சிரசினில் சூடிய
சங்கரன் மைந்தனே சண்முகன் சோதரா !
சரணம்
````````````
மோதகப் பிரியனே மூஷிக வாகனா
பாதமும் பணிந்திட பரிவுடன் காத்திடு
சோதனை போதுமெம் சுமைகளைத் தாங்கிடு
வேதனை நீக்கிடு விக்கின விநாயகா !
( விளச்சீர்களால் அமைந்த பாடல் )
Wednesday, November 4, 2015
சேய்போல மகிழ்வுதரும் சொந்தமுண்டோ ?
தாய்ப்பாடுந் தாலாட்டில் சொக்கிப் போகும்
***தாய்மடியே குழந்தைக்குத் தூளி யாகும் !
பாய்போட்டுப் படுத்தாலும் பக்கம் வந்து
***பாசமுட னணைத்தபடி யுடனே தூங்கும் !
சாய்ந்தாடுந் தலையாட்டிப் பொம்மை கண்டால்
***தானாடிக் கண்ணாடி முன்னே பார்க்கும் !
சேய்போல மகிழ்வுதரும் சொந்த முண்டோ ?
***செகத்தோரே சொல்வீரே சரியா வென்றே ...!!!
அன்பினிலே கரைந்தேன் நானே !
சாபமெனப் பருப்புவிலை யேறிப் போக
***சாம்பாரை மறந்திடத்தான் வேண்டு மென்றாள் !
கோபமுடன் தட்டோடு தூக்கி வீச
***கூப்பாடு போட்டவளும் திட்டித் தீர்த்தாள் !
தீபமென ஒளிவீசும் வாழ்வில் சண்டை
***தீராதோ எந்நாளும் தட்டுப் பாட்டால் !
தாபமுடன் அணைத்திடவே குளிர்ந்தாள் மெல்லத்
***தாரத்தின் அன்பினிலே கரைந்தேன் நானே !
( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
காய் காய் மா தேமா
காய் காய் மா தேமா
***சாம்பாரை மறந்திடத்தான் வேண்டு மென்றாள் !
கோபமுடன் தட்டோடு தூக்கி வீச
***கூப்பாடு போட்டவளும் திட்டித் தீர்த்தாள் !
தீபமென ஒளிவீசும் வாழ்வில் சண்டை
***தீராதோ எந்நாளும் தட்டுப் பாட்டால் !
தாபமுடன் அணைத்திடவே குளிர்ந்தாள் மெல்லத்
***தாரத்தின் அன்பினிலே கரைந்தேன் நானே !
( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
காய் காய் மா தேமா
காய் காய் மா தேமா
Tuesday, November 3, 2015
வசியமுடன் சிரித்திடுதே ....!!!
விண்மீன்கள் கண்சிமிட்டி மின்னிக் கொஞ்சி
***விளையாடும் இரவினிலே நாளும் வானில் !
வெண்பூக்கள் அந்தியிலே அவிழ்க்கும் மொட்டால்
***மென்வாசம் பரவிடுமே தென்றல் காற்றில் !
மண்டூகம் குரலோங்கக் கத்துஞ் சத்தம்
***மழையடித்து விட்டதுமே கேட்கும் காதில் !
வண்ணத்துப் பூச்சிக்கு மதுவைத் தந்து
***வசியமுடன் சிரித்திடுதே வண்ணப் பூவே ....!!
( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
Subscribe to:
Posts (Atom)