Thursday, April 9, 2015

காதலிக்குக் கல்யாணம் ....!!!


மனங்கள் கலந்தோம் 
மகிழ்வுடன் நிறைந்தோம் 
மணநாள் கனவில் 
மமகாரம் கொண்டோம் ! 

இதயம் பகிர்ந்தோம் 
இதமாய்க் களித்தோம் 
இளமைக் கனவில் 
இனிதே மிதந்தோம் ! 

கண்ணேறு பட்டதோ 
களங்கம் கற்பிக்க ... 
கருத்தில் வேறுபாடு 
கட்டாயப் பிரிவு ...! 

அவளுக்கு கல்யாணம் 
அழைப்பிதழ் வந்தது 
அடைத்தது நெஞ்சம் 
அழுகை வெடித்தது ! 

கட்டாயத் திருமணமாம் 
கனடா மாப்பிள்ளையாம் 
கடமைகள் முடித்துவிட 
கடிதில் விவாகமாம் ! 

உடன்பாடு அவளுக்குண்டோ 
உறவுகள் வற்புறுத்தலோ 
உருகிடுதே என்மனமும் 
உயிரென்னுள் துடிக்கிறதே ! 

நலப்பாடு எனக்கில்லை 
நடந்ததை மறப்பேனோ 
நன்காடு அழைக்கிறதே 
நமன்வரக் காத்திருப்பேன்...!!

No comments:

Post a Comment