Tuesday, April 21, 2015

துயிலும் அழகு ....!!




பஞ்சுமெத்தை மீதினில் பள்ளிகொண்ட தேவதையின் 
பிஞ்சுமுகம் கள்ளமிலாப் பேரெழிலே ! -கொஞ்சிட 
உள்ளந் தவித்திடும் உற்சாகந் துள்ளிவரும் 
அள்ளிடத் தோன்றும் அழகு ! 

கண்மையால் பொட்டொன்றைக் கன்னத்தில் வைத்திடுவேன் 
கண்ணே றுபடாமல் காத்திடுவேன் - பெண்ணழகே 
நித்திரையில் சொர்க்கமோ? நிம்மதியாய்க் கண்துயில்வாய் 
சித்திரமே சிங்காரச் சிட்டு !

No comments:

Post a Comment