Sunday, March 29, 2020

வண்ணப் பாடல் ...!!!

தன்னனன தானான தனதான
தன்னனன தானான தனதான
வண்ணமது நாவோடு விளையாடும்
மண்ணிசையி லேபாட லுருவாகும் !
கண்ணிமைகள் மூடாம லுனைநாடும்
கண்மடையில் நீரோட விடலாமோ?
வண்ணவிரல் வேலோடு முறவாட
மஞ்ஞையுட னேயாடி வருவாயே !
உண்மையொடு நாடோறு முனையோத
உன்நிழலி லேயாடு வரம்வேணும் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment