Sunday, March 29, 2020

வாழ்த்திப் பாடுவேன் ...!!!

Image may contain: one or more people and indoorமண்ணில் வாழுந் தெய்வ மென்று
மருத்து வர்தாள் பணிகிறேன் !
கண்ணி ரண்டின் நீர்ப்பெ ருக்கில்
கைகள் கூப்பித் தொழுகிறேன் !
எண்ணற் றோரின் சேவை யெண்ணி
இதயம் நெகிழ்ந்து சிலிர்க்கிறேன் !
தொண்டு செய்யும் தூய நெஞ்சைத்
தொடர்ந்து வாழ்த்திப் பாடுவேன் !!
சியாமளா ராஜசேகர்
உலக மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள் 🙏🙏🙏🙏

No comments:

Post a Comment