Monday, March 23, 2020

புயல் வருமே ...!!!

பூவிரி சோலையில் பொன்னந்தி மாலையில் புன்னகைத்துக்
காவிரி ஆற்றங் கரையினில் காதல் கவிவரைந்தே
ஓவியம் போல உளத்தில் நிறைந்தவன் ஊடலுற்றால்
பூவையின் நெஞ்சம் பொறுமை யிழக்கப் புயல்வருமே !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment