Thursday, March 26, 2020

நெஞ்சை உலுக்கியதே ...1!!

ஆடை களைந்து சோதித்த
அவலம் நெஞ்சை உலுக்கியதே!
மூடத் தனத்திற் களவிலையோ
மூளும் விளைவு புரியலையோ ?
கூடி இளைய சமுதாயம்
கொதித்துச் சீறிப் பொங்கிவிடில்
ஆடித் தானே போவீர்கள்
அனலில் வெந்து சாவீர்கள் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment