Sunday, March 29, 2020

சிவம் தெரியும் ...!!!

உனக்கு ளிருக்கு மிறையவனை
உணர்ந்து கொள்ள விதுதருணம் !
தனிமை கிடைத்த வரமாக
தமிழே நாளுந் துணையாக
மனத்தின் அழுக்கைத் துடைத்துவிட்டு
மௌன மாக வுள்நோக்க
அனைத்து மடங்கி யமைதியிலே
அன்பு கனிந்து சிவம்தெரியும் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment