Sunday, March 29, 2020

துடிக்கின்றேன்....!!!

நாட்டு நலத்தை விழைந்தபடி
நம்பிக் கையோ டுழல்கின்றேன் !
பூட்டிக் கொண்டு தனிமையிலே
புரியாத் தொற்றை எதிர்க்கின்றேன் !
வீட்டுக் குள்ளே இருந்தவண்ணம்
விரும்பித் தமிழைச் சுவைக்கின்றேன் !
ஆட்டிப் படைக்கும் கொரோனாவை
அடக்கம் செய்யத் துடிக்கின்றேன் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment