தேவகோட்டை மாதரசி ! தேமதுர சொல்லரசி !
தேவதைபோல் எழில்கொஞ்சும் தெய்வீக இசையரசி !
பாவனமாய் மணம்பரப்பும் பைந்தமிழின் பாட்டரசி !
சேவைசெயும் பெண்ணரசி ! திறமைமிக்க உரையரசி !
தேவதைபோல் எழில்கொஞ்சும் தெய்வீக இசையரசி !
பாவனமாய் மணம்பரப்பும் பைந்தமிழின் பாட்டரசி !
சேவைசெயும் பெண்ணரசி ! திறமைமிக்க உரையரசி !
சொற்பொழிவால் கேட்போரைச் சொக்கவைக்கும் சுவையரசி !
கற்றோரும் வியக்குவண்ணம் கவிபடைக்கும் கவியரசி !
வற்றாத தமிழூற்றாய் மகிழ்விக்கும் தமிழரசி !
சற்றேனும் சலிப்படையாச் சாந்தமான குணவரசி !
கற்றோரும் வியக்குவண்ணம் கவிபடைக்கும் கவியரசி !
வற்றாத தமிழூற்றாய் மகிழ்விக்கும் தமிழரசி !
சற்றேனும் சலிப்படையாச் சாந்தமான குணவரசி !
கலைமகளின் பெயர்கொண்ட கனிவான அன்னையிவள்
அலையில்லா ஆழ்கடல்போல் அமைதியான அறிவரசி !
மலைக்கவைக்கும் பண்பரசி ! வானளவு பேரிருந்தும்
தலைக்கனமே இல்லாத தகைமைமிகு கவினரசி !
அலையில்லா ஆழ்கடல்போல் அமைதியான அறிவரசி !
மலைக்கவைக்கும் பண்பரசி ! வானளவு பேரிருந்தும்
தலைக்கனமே இல்லாத தகைமைமிகு கவினரசி !
கணக்கில்லாப் பட்டிமன்றம் கவியரங்கம் கண்டவரின்
இணையில்லாத் தனிச்சிறப்பை எடுத்தியம்ப சொற்களில்லை
அணங்கிவரின் அரும்பணிகள் அளவிடவே முடியாது
வணக்கத்துக் குரியவரை மனம்கனிந்து வாழ்த்திடுவோம் !
இணையில்லாத் தனிச்சிறப்பை எடுத்தியம்ப சொற்களில்லை
அணங்கிவரின் அரும்பணிகள் அளவிடவே முடியாது
வணக்கத்துக் குரியவரை மனம்கனிந்து வாழ்த்திடுவோம் !
குடமுழுக்கு நாளிலிவர் குரலமுதைச் செவிமடுக்கக்
கடவுளரும் ஆவலுடன் காதுகளைக் கூர்தீட்டிப்
படையோடு காத்திருந்து பைந்தமிழைத் தாம்பருகி
அடடாவோ அடடாவென்(று) அகங்குளிர்ந்து வியந்திருப்பர் !
கடவுளரும் ஆவலுடன் காதுகளைக் கூர்தீட்டிப்
படையோடு காத்திருந்து பைந்தமிழைத் தாம்பருகி
அடடாவோ அடடாவென்(று) அகங்குளிர்ந்து வியந்திருப்பர் !
கண்ணுக்குக் கண்ணாக கையளவு மனத்திற்குள்
கண்ணதாசன் பாடல்களைக் கவினழகாய்ப் பொதித்துவைத்துக்
கண்ணுறங்கும் வேளையிலே கனவினிலும் அசைபோட்டுக்
கண்ணதாசன் புகழ்பாடும் கவிக்குயிலே வாழியவே !
கண்ணதாசன் பாடல்களைக் கவினழகாய்ப் பொதித்துவைத்துக்
கண்ணுறங்கும் வேளையிலே கனவினிலும் அசைபோட்டுக்
கண்ணதாசன் புகழ்பாடும் கவிக்குயிலே வாழியவே !
கடமையிலே கண்ணாக கருணையிலே தாயாக
மடமைகளைக் களைந்தெறியும் மாண்புமிகு பெண்ணாக
புடம்போட்ட பொன்னாக பொறுப்பான நடுவராக
நடமாடும் கலையரசி ! நற்றமிழ்போல் வாழியவே !
மடமைகளைக் களைந்தெறியும் மாண்புமிகு பெண்ணாக
புடம்போட்ட பொன்னாக பொறுப்பான நடுவராக
நடமாடும் கலையரசி ! நற்றமிழ்போல் வாழியவே !
முத்துவிழா காணுமெங்கள் முத்தமிழின் நாயகியே
நித்திலமாய் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் பாமணியே
தித்திக்கும் செம்மொழியாம் செந்தமிழ்போல் எந்நாளும்
உத்தமியே நீவாழி! ஓங்கட்டும் நின்புகழே !!!
நித்திலமாய் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் பாமணியே
தித்திக்கும் செம்மொழியாம் செந்தமிழ்போல் எந்நாளும்
உத்தமியே நீவாழி! ஓங்கட்டும் நின்புகழே !!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment