Sunday, March 29, 2020

பூந்துவிளை யாடும் புலம் !!

வெண்பா விருத்தமென வெவ்வேறு பாவகையில்
எண்ணற்ற பாக்க ளியற்றிடினும் - வண்டமிழில்
காந்தமென வென்னைக் கவர்ந்திழுக்கும் வண்ணந்தான்
பூந்துவிளை யாடும் புலம் .
பண்டிகை வந்துவிட்டால் பட்டுப் புடவைகள்
கண்முன் நிழலாடிக் களிப்பூட்டும் - வண்ணமாய்
ஏந்திழையார் மொய்க்கும் எழிற்காஞ்சி யேதான்யான்
பூந்துவிளை யாடும் புலம் .
(ஈற்றடி - கவிமாமணி ஹரி கிருஷ்ணன் அவர்கள்)
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment