Sunday, March 29, 2020

வண்ணப் பாடல் ...!!


தனந்த தானந் தனதன தானன தனதானா
தனந்த தானந் தனதன தானன தனதானா
மலர்ந்த பூவுஞ் செடியினி லாடிடு மழகாக
மணந்து நாளும் பரவச மேதரு மிதமாக
அலைந்த மேகந் தனிமையில் வானொடு விளையாடும்
அணிந்த நாணந் திரையிட வாசையில் மதியோடும்
குலுங்கி யாடுங் கிளைகளி லேகுயி லிசைபாடும்
குளிர்ந்து வீசும் வளியொடு நாணலு முறவாடும் !
வலிந்து பாடுங் கவிதையி லேவுள மிளகாதே
மகிழ்ந்து கூடும் பொழுதினி லேயிதழ் பிரியாதே
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment