புள்ளிமான்கள் சூழ்ந்திருக்க அழகான பெண்மான்
புன்னகைத்துப் பரிவுடனே அவற்றோடு பேசும்!
கள்ளமில்லாக் கன்னியவள் காதலனைக் காணக்
கானகத்தில் காத்திருக்கும் வேளையிலும் கூடத்
துள்ளியோடும் மானினமும் துடிப்போடு சேர்ந்து
துணையாகச் சுற்றிநின்றே அவன்வரவைத் தேடும் !
உள்ளத்தில் அன்பிருந்தால் எவ்வுயிரும் உறவே
உண்மையிதை உணர்ந்துகொண்டால் என்றுமிலை குறைவே!!!
புன்னகைத்துப் பரிவுடனே அவற்றோடு பேசும்!
கள்ளமில்லாக் கன்னியவள் காதலனைக் காணக்
கானகத்தில் காத்திருக்கும் வேளையிலும் கூடத்
துள்ளியோடும் மானினமும் துடிப்போடு சேர்ந்து
துணையாகச் சுற்றிநின்றே அவன்வரவைத் தேடும் !
உள்ளத்தில் அன்பிருந்தால் எவ்வுயிரும் உறவே
உண்மையிதை உணர்ந்துகொண்டால் என்றுமிலை குறைவே!!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment