Monday, March 23, 2020

இமை பூக்க வேண்டும் ...!!!

விண்மீன்கள் தரைபூக்க நிலமொளிர வேண்டும் !
வெண்ணிலவும் அதுகண்டு விழிவிரிக்க வேண்டும் !
மண்ணிலுள்ள மலர்களெல்லாம் விண்பூக்க வேண்டும் !
மங்கையரும் மையலுடன் அதைரசிக்க வேண்டும் !
தண்டலையில் மதிவரவில் மரைபூக்க வேண்டும் !
தண்ணீரில் மயிலாட அலைபூக்க வேண்டும் !
வண்டுகளின் ரீங்காரம் தாலாட்ட வேண்டும் !
வண்ணத்தில் கனவுகண்ட இமைபூக்க வேண்டும்!!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment