Sunday, March 29, 2020

நன்றி !!!

நலம்வாழத் துணைநிற்கும் அனைவ ருக்கும்
நன்றிகளைக் காணிக்கை யாக்கி விட்டோம் !
பலகரங்கள் ஒன்றாகச் சேர்ந்து தட்டிப்
பறைசாற்றி நேயத்தைப் பகிர்ந்து கொண்டோம் !
கொலையாளி கரோனாவைப் பாரை விட்டே
கூண்டோடு விரட்டுதற்கு மணிய டித்தோம்!
விலைமதிப்பில் லாவுயிரைப் பேணிக் காக்க
விட்டொழிப்போம் அச்சத்தை மனத்தை விட்டே!!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment