Sunday, March 29, 2020

வண்ணப் பாடல் ... சிவன் திருப்புகழ் ...!!!


தான தந்த தான தந்த
தான தந்த தான தந்த
தான தந்த தான தந்த தனதானா
ஆல முண்ட நீல கண்ட
னோடி ணைந்து தேவி யன்பி
லாடு கின்ற கோலம் நெஞ்சி லகலாதே !
ஆசை யுண்டு நேச முண்டு
காத லுண்டு வாழ்வி லென்று
மாதி யந்த மேது மின்றி யுழல்வோனே!
ஞால மெங்கு மேவி ரிந்து
பூத மைந்து மாய்நி றைந்து
நாக மொன்றை யேய ணிந்து வருவோனே !
நாளு மன்பி லேக ரைந்து
நாம மென்று மேமொ ழிந்து
நாடி வந்து பாடி யுன்ற னடிபேண !
கால னஞ்சு மாறு திங்க
ளோடு கங்கை சூடி வந்து
காவல் நின்ற ஈச னின்ப மருள்வானே!
காடு றைந்து மேனி யெங்கும்
நீற ணிந்து மாயை வென்ற
காள கண்ட னாடு கின்ற கயிலாயம்!
வேல னன்பி லேக னிந்த
போது ளம்சி வாய வென்று
மேவு செஞ்சொ லோது முன்ற செவிகேளாய்!
வீணி லென்ற வாழ்வ ழிந்து
காயம் வெந்து போகு முன்பு
வீட டைந்த பேறு தந்த பெருமானே.
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment