Thursday, March 26, 2020

எங்கெங்கெங்கோ தேடுகிறேன் ...!!!

என்னுள் ளிருக்கும் உனைமறந்தே
எங்கெங் கெங்கோ தேடுகிறேன் !
அன்புப் பெருக்கால் விழிநனைய
அடங்கா ஆவ லோடுன்னை
இன்னும் தேடி யலைகின்றேன்
இறைவா விடையும் கிடைக்கவில்லை !
கன்றின் தவிப்பை அறியாயோ
கனிவாய் உணர்த்த மாட்டாயோ ??
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment