தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தனதானா
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தனதானா
தானதன தானதன தனதானா
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தனதானா
ஆறுபடை வீடுடைய ஆறுமுக வேலவனும்
ஆறுதலை யேயருள வருவோனே !
ஆவலொடு பாடுமடி யாரிதய மேயுறைய
ஆனைமுக னோடருகில் விரைவோனே !
வீறுகொளு சூரர்தமை வேலுமிரு கூறுசெய
வேழமக ளோடுமணம் புரிவோனே !
வேதனையெ லாம்விலக நாடிவரு வோர்மகிழ
வீடுபெற வேகருணை அருள்வாயே !
பேறுடைய மாகயிலை வாழ்பரம னார்மகனும்
பீடுடைய தேனிசையில் மகிழ்வோனே !
பேரழகு வேடர்மகள் நாணமுற வேயினிது
பேசியுற வாடுமெழில் மணவாளா!
நீறணியு மேனியொடு மார்பிலணி யாரமொடு
நீலமயில் மீதுநட. மிடுவோனே !
நேயமிக வேபழநி மாமலையி லேயுறையும்
நீடுபுக ழோடுதிகழ் பெருமாளே!
ஆறுதலை யேயருள வருவோனே !
ஆவலொடு பாடுமடி யாரிதய மேயுறைய
ஆனைமுக னோடருகில் விரைவோனே !
வீறுகொளு சூரர்தமை வேலுமிரு கூறுசெய
வேழமக ளோடுமணம் புரிவோனே !
வேதனையெ லாம்விலக நாடிவரு வோர்மகிழ
வீடுபெற வேகருணை அருள்வாயே !
பேறுடைய மாகயிலை வாழ்பரம னார்மகனும்
பீடுடைய தேனிசையில் மகிழ்வோனே !
பேரழகு வேடர்மகள் நாணமுற வேயினிது
பேசியுற வாடுமெழில் மணவாளா!
நீறணியு மேனியொடு மார்பிலணி யாரமொடு
நீலமயில் மீதுநட. மிடுவோனே !
நேயமிக வேபழநி மாமலையி லேயுறையும்
நீடுபுக ழோடுதிகழ் பெருமாளே!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment