Monday, October 8, 2018

கலகலவென அவள் சிரிக்கையில் ....!!!


துளித்துளியென விழுந்திடும்மழை நனைத்திடும் இன்பம்
***சுகம்பெருகிடும் மகள்வரவினில் விலகிடும் துன்பம் !
குளிர்தருவென தருநிழலென நிறைந்திடும் நெஞ்சம்
***குழலிசையொடு குயில்மொழியவள் குரலினில் தஞ்சம் !
வளிவருடிடும் இதமவளிரு விழிகளில் மின்னும் 
***வனப்பினில்முகம் மதியொளியென மலர்ந்திடும் இன்னும் !
களித்திடும்மனம் கனித்தமிழென கவிதையில் பூக்கும்
***கலகலவென அவள்சிரிக்கையில் கமலமும் தோற்கும் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment