பட் என்று தொடங்கி படார் என்று முடியும் பாக்கள்!!
பட்டுடல் தீண்டிய பாதகர் பேயுடலை
வெட்டிப் புதைத்து விடவேண்டும்! - வட்டமிட்(டு)
ஆவியா யென்று மலையட்டு மிவ்வுலகில்
பாவியர்மன் னிக்கப் படார்.
பட்டணத்து வீதியில் பஞ்சுமிட்டாய்த் தின்றபடி
கட்டியவன் கையோடு கைசேர்த்துச் - சிட்டாக
ஊர்க்கதை கள்பேசி ஒட்டி நடந்தாலும்
பார்ப்போரால் சீண்டப் படார்.
பட்டுணர்ந்த தாலே பரிவுடன் மூத்தோரும்
எட்டும் வரையில் எடுத்துரைப்பார் - திட்டிடினும்
குட்டிடினும் உள்ளத்தில் குன்றாத அன்புடையோர்
பட்டென்று கோபப் படார்.
பட்டாடை கட்டிய பாவையின் கார்க்குழலும்
பொட்டிட்ட பொன்முகத்தில் புன்னகையும் - கட்டோடு
காவியையும் ஈர்த்துவிடும் காரணத்தால் மூழ்கிவிட்டப்
பாவியரும் மீட்கப் படார்.
சியாமளா ராஜசேகர்
பட்டுடல் தீண்டிய பாதகர் பேயுடலை
வெட்டிப் புதைத்து விடவேண்டும்! - வட்டமிட்(டு)
ஆவியா யென்று மலையட்டு மிவ்வுலகில்
பாவியர்மன் னிக்கப் படார்.
பட்டணத்து வீதியில் பஞ்சுமிட்டாய்த் தின்றபடி
கட்டியவன் கையோடு கைசேர்த்துச் - சிட்டாக
ஊர்க்கதை கள்பேசி ஒட்டி நடந்தாலும்
பார்ப்போரால் சீண்டப் படார்.
பட்டுணர்ந்த தாலே பரிவுடன் மூத்தோரும்
எட்டும் வரையில் எடுத்துரைப்பார் - திட்டிடினும்
குட்டிடினும் உள்ளத்தில் குன்றாத அன்புடையோர்
பட்டென்று கோபப் படார்.
பட்டாடை கட்டிய பாவையின் கார்க்குழலும்
பொட்டிட்ட பொன்முகத்தில் புன்னகையும் - கட்டோடு
காவியையும் ஈர்த்துவிடும் காரணத்தால் மூழ்கிவிட்டப்
பாவியரும் மீட்கப் படார்.
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment