Monday, October 8, 2018

வண்ணப் பாடல் ( கந்தன் திருப்புகழ் )

தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த.... தனதானா
நெஞ்சி லன்பு கொண்டு ழன்று
சந்த முந்த வந்து கொஞ்ச
நின்ப தம்ப ணிந்து நின்று மகிழ்வேனோ
நிந்தி தம்பு ரிந்து வெம்பு
மன்ப னின்கு ணந்தெ ரிந்து
நிந்தை என்று நொந்தொ துங்கி விடலாமோ
வஞ்ச மின்றி யுன்ப தங்க
ளொன்றி யன்பு விஞ்சி யுந்த
வன்சி னம்த ணிந்த கந்த வடிவேலா
மஞ்சு ளம்பொ ருந்தி நின்று
குன்ற மெங்கி லுந்தி கழ்ந்து
மங்க ளங்க ளின்று பொங்க வருள்வாயே
தஞ்ச மென்று நம்பி வந்த
அண்டர் துன்ப மன்று வென்று
தங்கி யங்கெ ழுந்த செந்தி லழகேசா
தண்டை யுங்கு லுங்க வந்து
சிந்தை யுங்க னிந்து சம்பு
தந்த னந்த னந்த னந்த வெனவாட
நஞ்சை யுண்ட வன்சி வந்த
கண்தி றந்து சொந்த மென்று
நண்பு டன்ப யின்று வந்த புதல்வோனே
நன்று ளம்ப டிந்து வந்து
பங்க மின்றி யின்பு தந்து
ஞஞ்சை யும்க டந்து பண்பி லொளிர்வேனோ
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment