Tuesday, October 2, 2018

காட்டிடாயோ...???


உள்ளத்தி லொன்று வைத்தே 
***உதட்டளவி லொன்று பேசிக் 
கள்ளமனத் தோடு நாளும் 
***காசினியில் உழலு வோரை 
எள்ளிநகை யாடு வோரை 
***எடுத்தெறிந்து பேசு வோரை 
முள்ளாய்நெஞ் சில்தைப் போரை 
***முன்னேநீ காட்டி டாயோ ??

No comments:

Post a Comment