Tuesday, October 2, 2018

பண்ணிருக்கு! ஏனோ பயம்?



கண்மணி வாராய் கவிவனைய லாமிங்கே! 
பண்ணிசைத்(து) ஒன்றாகப் பாடலாம்! - பெண்ணுனக்கு 
வெண்பாட்(டு) எனவழைக்கும் வெண்பா வியற்றிடப் 
பண்ணிருக்கு ஏனோ பயம். 
(பண் - தகுதி என்ற பொருளில்) 

தம்புரா வோடு தபலாவும் வந்தாச்சு; 
சும்மாவோர் பாட்டு சுருதியொடு - தெம்பாக 
வண்ணத்தில் பாடு! வயலினுடன் நல்லழகு 
பண்ணிருக்கு! ஏனோ பயம்? 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment