Monday, October 8, 2018

முத்தமிழே ....!!

எத்திக்கும் புகழ்மணக்க விளங்குவது முத்தமிழே
முத்தமிழாம் இயலிசையும் நாடகமும் தித்திக்கும்
தித்திக்கும் இலக்கியமும் இலக்கணமும் முத்தாகும்
முத்தாகக் கவர்ந்திழுக்கும் தமிழிசைநம் சொத்தாகும்
சொத்தாகித் தமிழர்தம் வாழ்வினுக்கே வித்தாகும் 
வித்தாகி விருட்சமென வளர்த்துவிடும் உத்தமமாய்
உத்தமமாய் வழிகாட்டிச் சிறப்பிக்கும் மித்திரமாய்
மித்திரமாய் உடனிருந்தே மணம்பரப்பும் எத்திக்கும் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment