#நாட_உயிர்க்கு_நலம்
காலன் அழைக்கையில் காசும் உதவாது
கோலம் குலைத்தவன் கொண்டுசெலுங் - காலத்தே
வீடளிப் பாயென வேலன் மலர்ப்பதம்
நாட உயிர்க்கு நலம்.
தொல்லைகள் வாழ்வினில் சூழ்ந்திடும் போழ்தினில்
அல்லல் களைய அருள்புரியும் - தில்லையின்
ஆட லரசை அகம்நிறை அன்புடன்
நாட உயிர்க்கு நலம்.
நெஞ்சம் நெகிழ்ந்தன்பாய் நீயே சரணெனத்
தஞ்ச மடைந்தால் தயவுடன் - அஞ்சேலென்(று)
ஓடி வருபவனை ஓங்கார மானவனை
நாட உயிர்க்கு நலம்.
நோயுற் றிருக்கையில் நொந்துமனம் வாடாமல்
ஆயுளை நீடிக்க அன்றாடம் - தூயவன்பாய்க்
கூடியொன்றாய்ச் செய்திடும் கூட்டுப் பிரார்த்தனை
நாட உயிர்க்கு நலம்.
குருதி வழிந்தோடக் குற்றுயி ராகத்
தெருவில் கிடப்போனைத் தேற்றப் - பரிவுடன்
ஓடிப்போய்த் தூக்கி உடனே மருத்துவரை
நாட உயிர்க்கு நலம் .
விரும்பி மணமுடித்து வீடுவந்து தன்னுள்
கருசுமக்கும் மங்கையைக் காப்பீர்! -நொருங்கியவள்
வாட விடமான வார்த்தையுமி ழாமலன்பாய்
நாட உயிர்க்கு நலம்.
( ஈற்றடிக்கு வெண்பா )
காலன் அழைக்கையில் காசும் உதவாது
கோலம் குலைத்தவன் கொண்டுசெலுங் - காலத்தே
வீடளிப் பாயென வேலன் மலர்ப்பதம்
நாட உயிர்க்கு நலம்.
தொல்லைகள் வாழ்வினில் சூழ்ந்திடும் போழ்தினில்
அல்லல் களைய அருள்புரியும் - தில்லையின்
ஆட லரசை அகம்நிறை அன்புடன்
நாட உயிர்க்கு நலம்.
நெஞ்சம் நெகிழ்ந்தன்பாய் நீயே சரணெனத்
தஞ்ச மடைந்தால் தயவுடன் - அஞ்சேலென்(று)
ஓடி வருபவனை ஓங்கார மானவனை
நாட உயிர்க்கு நலம்.
நோயுற் றிருக்கையில் நொந்துமனம் வாடாமல்
ஆயுளை நீடிக்க அன்றாடம் - தூயவன்பாய்க்
கூடியொன்றாய்ச் செய்திடும் கூட்டுப் பிரார்த்தனை
நாட உயிர்க்கு நலம்.
குருதி வழிந்தோடக் குற்றுயி ராகத்
தெருவில் கிடப்போனைத் தேற்றப் - பரிவுடன்
ஓடிப்போய்த் தூக்கி உடனே மருத்துவரை
நாட உயிர்க்கு நலம் .
விரும்பி மணமுடித்து வீடுவந்து தன்னுள்
கருசுமக்கும் மங்கையைக் காப்பீர்! -நொருங்கியவள்
வாட விடமான வார்த்தையுமி ழாமலன்பாய்
நாட உயிர்க்கு நலம்.
( ஈற்றடிக்கு வெண்பா )
No comments:
Post a Comment