Tuesday, October 2, 2018

சோலையிலே....!!!

மொட்டு விரிந்து முழுதாய் மலர்ந்தவெண் முல்லைமணம் 
எட்டும் வரையில் இனிமை பரப்பி இதமளிக்கும் 
சிட்டுக் குருவி சிணுங்கு மொலியும் சிலிர்ப்பளிக்கும் 
தொட்டுத் தழுவிச் சுகந்தரும் தென்றலும் சோலையிலே ! 

No comments:

Post a Comment