Monday, October 8, 2018

அதியழகு கோலம் ...!!!




கதிர்மெல்லக் கரம்நீட்டி இருள்துடைத்து விரியும்
***கவினழகாய்ப் மலர்ந்தவல்லி மதிமறைய மயங்கும் !
முதிராத பூங்காற்று சுகமாகத் தழுவும்
***முகிலினங்கள் அலையலையாய்ப் புலர்பொழுதில் உலவும் !
அதியழகாய்க் கீழ்வானம் சிவந்திருக்கும் கோலம் 
***அதுகண்டு துயில்கலைந்து விழித்திடுமே ஞாலம் !
உதிக்கின்ற காட்சிதனை அனுதினமும் கண்டும் 
***ஒருநாளும் சலித்ததில்லை இருவிழிகள் என்றும் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment