Tuesday, October 2, 2018

கலை எனத் தொடங்கித் தலை என முடியும் பாக்கள் !!!



சகோதரி ஜெயம் ராமச்சந்திரன் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க.... 
கலை எனத் தொடங்கித் தலை என முடியும் பாக்கள் !!! 

கலைஞரை வாழ்த்திக் கனிவுடன் வேண்ட 
கலைமகள் நெஞ்சம் கனிவாள் ! - வலையில் 
உமிழாதே வார்த்தைகளை உள்ளன் புடனே 
தமிழனாய்த் தாழ்த்து தலை. 

கலைந்துசெலும் மேகமாய்க் காணாமற் போகும் 
தொலைவில் படுத்தும் துயர்கள் ! - நிலையாய் 
அமிழ்தி னினிய வழகு மொழியாம் 
தமிழ்தருமே ஆறு தலை. 

கலைமான் இணையொடு காதலில் கூடும் 
அலைகளில் மீன்துள்ளி யாடும் - மலையினின்றும் 
பாய்ந்துவிழும் சிற்றருவி பார்த்துமகிழ் வோடியற்கைத் 
தாய்க்குப் பணிவேன் தலை. 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment