சகோதரி ஜெயம் ராமச்சந்திரன் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க....
கலை எனத் தொடங்கித் தலை என முடியும் பாக்கள் !!!
கலைஞரை வாழ்த்திக் கனிவுடன் வேண்ட
கலைமகள் நெஞ்சம் கனிவாள் ! - வலையில்
உமிழாதே வார்த்தைகளை உள்ளன் புடனே
தமிழனாய்த் தாழ்த்து தலை.
கலைந்துசெலும் மேகமாய்க் காணாமற் போகும்
தொலைவில் படுத்தும் துயர்கள் ! - நிலையாய்
அமிழ்தி னினிய வழகு மொழியாம்
தமிழ்தருமே ஆறு தலை.
கலைமான் இணையொடு காதலில் கூடும்
அலைகளில் மீன்துள்ளி யாடும் - மலையினின்றும்
பாய்ந்துவிழும் சிற்றருவி பார்த்துமகிழ் வோடியற்கைத்
தாய்க்குப் பணிவேன் தலை.
சியாமளா ராஜசேகர்
கலை எனத் தொடங்கித் தலை என முடியும் பாக்கள் !!!
கலைஞரை வாழ்த்திக் கனிவுடன் வேண்ட
கலைமகள் நெஞ்சம் கனிவாள் ! - வலையில்
உமிழாதே வார்த்தைகளை உள்ளன் புடனே
தமிழனாய்த் தாழ்த்து தலை.
கலைந்துசெலும் மேகமாய்க் காணாமற் போகும்
தொலைவில் படுத்தும் துயர்கள் ! - நிலையாய்
அமிழ்தி னினிய வழகு மொழியாம்
தமிழ்தருமே ஆறு தலை.
கலைமான் இணையொடு காதலில் கூடும்
அலைகளில் மீன்துள்ளி யாடும் - மலையினின்றும்
பாய்ந்துவிழும் சிற்றருவி பார்த்துமகிழ் வோடியற்கைத்
தாய்க்குப் பணிவேன் தலை.
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment