மட்டிலாக் களிப்பில் திருமணம் முடிந்து
***மணமகள் இல்லறம் புகுந்தாள் !
கட்டிய காதல் கணவனுக் காக
***கருத்துடன் சமைத்திட லானாள் !
கட்டித்த யிரினை விரல்களால் பிசைந்து
***கைகளைச் சேலையில் துடைத்தாள் !
ஒட்டிய கரியைப் பொருட்படுத் தாமல்
***உணவினைத் தலைவனுக் களித்தாள் !!
முதல்முத லாக அடுக்களை சென்று
***முயன்றிட ஆவலில் துடித்தாள் !
விதவித மாகச் செய்திட நினைத்தும்
***விறகடுப் பெரித்திட அறியாள் !
புதியவள் தம்மின் குவளை விழிகளும்
***புகையினால் எரிந்திடக் கசிந்தாள் !
பதியுடைப் பாசம் பெரிதெனக் கருதிப்
***பக்குவப் பட்டிட லானாள் !
அன்புடை நெஞ்சம் கலந்தத னாலே
***அகமகிழ்ந் தவள்பரி மாற
இன்முகத் தோடே உண்டவன் சுவையோ
***இனிதெனச் சொல்லிட மலர்ந்தாள் !
நன்றெனச் சொன்ன மன்னவன் மொழியில்
***நங்கைதன் இதயமும் நெகிழ்ந்தாள் !
குன்றென வுயர்ந்த காதலைச் சிறப்பாய்க்
***குறுந்தொகை காட்டிய தழகே !!
சியாமளா ராஜசேகர்
***மணமகள் இல்லறம் புகுந்தாள் !
கட்டிய காதல் கணவனுக் காக
***கருத்துடன் சமைத்திட லானாள் !
கட்டித்த யிரினை விரல்களால் பிசைந்து
***கைகளைச் சேலையில் துடைத்தாள் !
ஒட்டிய கரியைப் பொருட்படுத் தாமல்
***உணவினைத் தலைவனுக் களித்தாள் !!
முதல்முத லாக அடுக்களை சென்று
***முயன்றிட ஆவலில் துடித்தாள் !
விதவித மாகச் செய்திட நினைத்தும்
***விறகடுப் பெரித்திட அறியாள் !
புதியவள் தம்மின் குவளை விழிகளும்
***புகையினால் எரிந்திடக் கசிந்தாள் !
பதியுடைப் பாசம் பெரிதெனக் கருதிப்
***பக்குவப் பட்டிட லானாள் !
அன்புடை நெஞ்சம் கலந்தத னாலே
***அகமகிழ்ந் தவள்பரி மாற
இன்முகத் தோடே உண்டவன் சுவையோ
***இனிதெனச் சொல்லிட மலர்ந்தாள் !
நன்றெனச் சொன்ன மன்னவன் மொழியில்
***நங்கைதன் இதயமும் நெகிழ்ந்தாள் !
குன்றென வுயர்ந்த காதலைச் சிறப்பாய்க்
***குறுந்தொகை காட்டிய தழகே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment